Monday, January 23, 2017

தீயினால் சுட்ட புண்...ஆறாது..

தீயினால் சுட்ட புண்...ஆறாது..
ஆறவே ஆறாது..ல

திருவரங்கம்....
திரும்பிப் பார்க்கிறேன் இந்நாளை

தாயார் பேரிலொரு
திருமண மண்டபம்..
வாசலுக்கு பேர்பெற்ற ஊரில்..
வந்தது இந்த மண்டபம்..
சிறிய வாசலும்..
குறுகிய படிக்கட்டும்..
குறையாய்ப் படவில்லை..
குதூகலத்தின் நடுவினிலே..
ஜாம் ஜாமென்று ..
ஜானவாசம் நடப்பு..
ஜொலிக்கும் அலங்காரத்துடன்
ஜனத்திரள் அங்கே..
முகூர்த்த நேரம்..
முண்டியடிக்குமோ கூட்டம்..
முதல் நடவடிக்கை..
மாடியில் பந்தல்..
பளபளக்கும் பேப்பரிலே..
புதுசாய் ஒர் அலங்காரம்
புதுப் பெண்ணும் பிள்ளையும்..
புது வாழ்வு புகும் நேரம்..
மாலை மாற்றியாச்சு..
மணமகள் தயாரங்கே..
தாலி கழுத்தில் ஏற..
புகைப்படங்கள்..
பொங்கும் இன்பத்தை..
படம் பிடிக்க..

வீடியோ பிடிக்க வந்தவனோ..
விதியை மாற்ற வந்தவனோ..
சிறு பொறி வந்ததது..
சீரழிக்க வந்தது..

அலங்கார த் தோரணங்கள்..
அவசரமாய்த் தீப்பிடிக்க..
அரை நொடியில் அங்கே..
அரக்கனாய்த் தீக்கங்குகள்

மங்கள இசைக்குப் பதிலே
மயானக் காட்சி அங்கே..

அங்கும் இங்கும் ஓடினரே..
எங்கோ ஒரு வழியுண்டா என்றே..

குழவிகளும்..குமரிகளும்..
கிழவரும் கிழவியும்..
சிக்கித் தவித்தனரே..
சிறுவழியது நெருக்க..

சிதறிய கனவுகள்..
கதறிய திருவரங்கம்..
அரங்கனும் கேட்டிருப்பான்..
அலறல்கள்..ஓலங்கள்..
.
காத்திருந்தேனா..இதற்குப் போய்
காவிரித்தாயும் ..கலங்கினளே..

ஆண்டு பதினாலு ஆச்சு..
ஆறவில்லை..காயம் இன்னும்.
ஆறுதல்கள்..
ஆற்றவில்லை காயத்தை..
ஆத்மா சாந்தியடைய..
அவனை வேண்டுகிறேன்..
தீயினால் சுட்டப் புண்..
ஆறாது..
ஆறவே ஆறாது..
.

No comments: