Sunday, May 7, 2017

எலியாருக்கு engagement

எலியார்க்கு engagement..

சில விடியல்கள் சுவாரசியமானவை..இன்னிக்கு என் பள்ளியெழுச்சியும் அப்படித்தான். டிகாக்‌ஷன் போட போனவளின் பார்வை மேடை ஓரத்தில் கொஞ்சம் இன்னும் பழுக்கட்டும்னு வெச்சிருந்த தக்காளி பரிதாபமா குதறப்பட்டு ஐசியு ல கிடந்தது.ஓஹோ..மஹானுபாவர் விஜயமோ இன்னிக்கினு மண்டையில் tension ஏற..அதோ அங்கே என் உயிரிலும் மேலான மஞ்சள் 'tupperware' முனகிண்டு எப்படி ஆகிட்டேன் பாருனு முகாரி பாடித்து.
(டப்பர் வேர் இருக்கே ..அத மூடறத்துக்கு ஒரு மேதாவியா இருக்கணும்..இல்ல சைடு வழியா காத்து போய்டும்). நான் இப்படி கஷ்டப்பட்டு மூடி வெச்ச பிஸ்கட் டப்பாவை..அதுவும் அதோட மூடியை கடிச்சு குதறிய எலி மட்டும் என் கையில் கிடச்சா...
ஒரு ஏழு எட்டு மாசத்துக்கு முன்னாடியும் இவா பிரச்சனை ரொம்ப ஜாஸ்தியா இருக்க..
எலியானாலும் எளிதா எக்ஸ்பர்ட் அட்வைஸ் தரும் உஷா அக்காவுக்கு( என் நாத்தனார்)ஃபோன் போட்டேன். அடடே..தன் usual தொனியில் ..நானும் இப்படித்தான் அகிலா கஷ்டப்பட்டேன்.நம்ம ராணி (வலது கரம்)சொன்னா..'அக்கா நீ அதுக்கு கல்யாணம் பண்ணி வெக்கறேனு வேண்டிக்கோ..ஓடிடுங்க்கா' என்றாளாம்.முதலில் சிரித்த நான்..சீரியஸ் ஆனேன்...'எலியே..எலியே
.ஓடிடும்மா..
மருந்தெல்லாம் வெச்சு கொல்ல விரும்பலைம்மா..(அதை விட பெரிய தண்டனை உனக்கு)கல்யாணம் பண்ணி வெக்கறேம்மா..என்ன ஆச்சரியம்..! அப்பறம் திரும்பி கூடப் பார்க்கலை எலியார் என் வீட்டை..நான் அப்பப்போ நினச்சுப்பேன்..அந்த எலி கல்யாணம் ஆகி ஹனிமூன் போய்ட்டு இப்போ summer ல fridge க்கடியிலும் ஏசியிலும் உட்கார்ந்து குடித்தனம் பண்ணிண்டு இருக்குமா..இல்லே..ஐய்யோ சாமி..கல்யாணமா..எனக்கா..
வேண்டாஞ்சாமி..உன் பக்கமே தலை வெச்சு படுக்க மாட்டேனு ஓடியிருக்குமா..ஆனாலும் ஒரு பயம்..இந்த வேண்டுதல் யாருக்கு நான் பண்ற சத்தியம்..leave it ..எலி விஜயம் இப்போதான் இல்லையேனு இறுமாந்து இருந்த வேளை..
இன்னிக்கு வந்த எலி என்னை பழி வாங்க வந்திருக்கா..இல்ல அதோட தோழர் (ழி)ஐ..இந்தம்மா..ரொம்ப ராசியான அம்மா..உனக்கு சீக்கிரம் விவாஹப் ப்ராப்திரஸ்து ஆகும்னு செண்டிமெண்டா வந்த எலியா..
ஒண்ணும் புரியல..
சக்கரை சிந்திய டேபிளை அப்பா துடைக்க..இங்கே கொஞ்சம் சரியா துடைங்கோப்பா..எறும்பு வந்துடும்னு நான் சொல்ல..ஏக எரிச்சலில் அவர்..எலியே வந்துடுத்தாம்..இந்த எறும்பு என்ன பண்ணப் போறதுனு..தூபம் போட..
இன்னிக்கு ராத்திரி வரப் போற எலியாருக்காக ஏற்கனெவே வேண்டிண்டாச்சு..கல்யாணம் பண்ணி வைக்கிறேனு..
அவள்(ர்)..வருவாளா(ரா)..

எலியார் engagement.. Day 2
தடைய ஆராய்ச்சிக்குப் பின்
தடமும் காண்டார் தந்தை
தடாவும் போட்டார்..
திறக்காதே ஜன்னலென்று..

புழுக்கை காட்டியது
புகுந்த வழியதுவே..

காத்து வேணுமா..இல்ல
குதறல் வேணுமா என்று
கத்தி முனையில் ..
கேள்வியுடன் அப்பா..

கொளுத்தும் வெய்யிலில்
கொடுமை ஏதடானு
குமுறி வேண்டினேன்...
திரும்பி வந்தாயோ..
திருமணம் திருப்பியுமென்று..

போய் வா எலியே போய் வா.

No comments: