Tuesday, January 22, 2019

நாளாம்..நாளாம்..திருநாளாம்

நாளாம்..நாளாம்..திருநாளாம்

மூட்டு வலி..முதுகு வலி
முணுமுணுப்பில் உறக்கம்
மறக்காமல் கூவும்் கடிகாரம்
முடிந்ததே இரவு..
விடிந்ததே விரைவிலென்று
வாரிச் சுருட்டி எழுச்சி..
"உனக்கென்ன ..
உபாதை ஒன்றுண்டா..
உரிய நேரத்தில் வந்து
உன் வேலை தொடங்குகிறாய்.."
சூரியனுக்கு சுளுக்கில்லை
சந்திரனுக்கு சளித் தொல்லையில்லை.
நட்சத்திரத்துக்கு நரம்பு தளர்ச்சியில்லை.
மேகத்துக்கு முதுகு வலியில்லை.

அசதியுடன் விழித்தாலும்
அசத்தலாக்குகிறேன் என் நாளை.

சூட்சுமம் அறிந்தேன்..
சுருங்கியவள் விரிந்தேன்.

மறையும் மதியும் மலரும் காலையும்
மறக்காமல்  சொல்லுமே சேதி
வலி கொடுத்த ஆண்டவன்..மன
வலிமையும் கொடுப்பான்
வழியும் திறப்பான்..
நாளைத் துவங்க..
நாளெல்லாம் திருநாளாக்க.
Thanks to Swaminathan Ramasubramanian sir. உங்கள் அருமையான பதிவுக்கு இந்த கிறுக்கல் சமர்ப்பணம்.
Happy week ahead friends.
#myclick

No comments: