Sunday, May 12, 2019

ராஜ ராகம்

ராஜ ராகம்..
Raaja sir music..a part and parcel of life)

 வழிந்தோடிய நதியாய்
வயலினும் விணையும்
வசப்படுத்த
செல்லோவும் சித்தாரும்
செல்லமாய் வருட
கிட்டாரின் தந்திகள்
கிறங்கத்தா னடிக்க
பியானோக்கள்..
புத்தம் புது மெட்டிசைக்க
தபேலாக்காளின் தாளங்கள்
தலையாட்டச் செய்ய
கோரஸின் குரல்களோடு
கூட்டத்தில் நாம்கலக்க
நாதஸ்வரங்கள்..
நாத வெள்ளத்தில் மூழ்கடிக்க
தாரையும் தப்பட்டையும்
தனை மறந்தாடச்செய்ய
புல்லாங்குழல்கள்
புதுராகம் பாட..
பேரறியாக் கருவிகளும்
மோட்சமடைந்ததுவே
மாஸ்ட்ரோ உன்னாலே..
சுகமொ சோகமோ
சுற்றி வரும்
மெட்டுனதே..
இசைஞானி உன்னாலே
இசையும் இயல்பானதிங்கே
தாலாட்டும் கரங்கள்
நம்மை விட்டுச் சென்றாலும்
தனிமைக்கு ஓர் துணை
தெவிட்டாத உன்னிசை தானே

No comments: