Monday, October 21, 2019

Trichy

அருமையான பதிவு... என்னையும் எங்கூர எட்டி பார்க்க வைச்சது. Shiv K Kumar sir

திருச்சி வாசம்..
TST bus..
TMS பாட்டு..
ஓர சீட்டில் ..
ஊரை வேடிக்கை..

மலைக்கோட்டை வரும்..
மாங்கு..மாங்குனு..
தெப்பகுளம் வழியா..
தாயுமானவருக்கு..
தோப்புக்கரணம் போட்டு..
சாரதாஸிலும்..கீதாஸிலும்..
கிடீஸ் கார்னரிலும்..
துணி வாங்கி..
பசியாற..போவோம்..
வசந்த் பவனுக்கு..
குடும்பம்..ரொம்ப ஒத்துமையா..
எல்லாரும்..ஒரே அயிட்டம்..
மசாலா தோசை ஆர்டர் பண்ணி..
முடிக்க முடியாம ..முழுங்கி..
தின்ன தோசை..
சீரணமாக..
பொடி நடையா நடந்து ..
வீடு வந்து சேர்வோம்..
வாங்கி வந்த துணியை
தினமும் எடுத்து பார்த்து..
புது வாசம் முகர்ந்து பார்த்து..
எப்போ தீபாவளி வரும்..
முதல் ஆளா..ரெடி ஆகி..
புதுத் துணி போட்டு
பட்டாசு வெடிச்சு..
ஊரை எழுப்பிய கதையெல்லாம்..
இப்போ சொன்னா..
So cheap ங்கறாங்க..
திரும்பிப் பார்த்தேன்..
திரும்பி வரா நாட்களை..
உங்கள் பதிவின் மூலம்..
Thanks Shiv K Kumar

No comments: