Saturday, November 21, 2020

அழகே அழகு

 எங்கே தேடுவேன்..அழகை எங்கே தேடுவேன்..


கடவுள் படைப்பிலேயே உங்களுக்கு ரொம்ப பிடிச்சது எதுனு கேட்டால் ..என்ன பதில் சொல்வோம்?


உடனே..ஒரு குட்டி கவிதை ஓடும்..


விடியும் காலை..

விரியும் பூக்கள்

விழும் அருவி

வீசும் தென்றல்

ஓடும் நதி

ஒருமிக்கும் கடல்

ஓயாத அலை

ஓங்கி வளர்ந்த மரம்

வலம் வரும் நிலா

வானத்து விண்மீன்கள்

நகரும் மேகம்

நல்ல மழை..

மலைப்பாக்கும் மலைகள்

மருள வைக்கும் பள்ளத்தாக்குகள்.


இப்படி லிஸ்ட் நீளும்..


ஆனால்..இதையெல்லாம் விட பெரிய அழகு எது?


#நாம்_தாங்க  அவன் படைப்பில் மிக அழகு .


மறைந்திருக்கும் ..

#நம்_மனம் தாங்க  அவன் படைப்பில் அழகோ அழகு..


எத்தனை அன்பு அவனுக்கு நம் மேல்..

போ..போய் ரசித்து வா உலகை என்று நம்மை படைத்து அனுப்பி இருக்கான்..


வாங்க..ரசிப்போம்..

அவன் நமக்காக படைத்த இந்த ரம்மியமான உலகை..

No comments: