Monday, January 4, 2016

புத்தாண்டுப் ப்ராத்தனை


இறை வணக்கம்

 தேடி யெங்கும்   அலையத் தேவையில்லை  
தெரு முனையிலும்  அழகாய் அமர்ந்தே
வரு வினைகள்  களையும் -அத்தும்பிக்கை
 நாதன்  தாள்  போற்றி.

 அண்டமது எதுவென்று அண்ணன் விளம்ப  
கொண்ட  கோபமது  தான் காட்ட
ஆண்டிக்  கோலமது  பூண்ட -பழனி
ஆண்டான் தாள் போற்றி.

 மான்  விழியாள்  மனம் நிறைக்க
மின்னும் மானைத் துரத்தி ஓடி
மாய  வலையில்  சிக்கிய  - சீதாராம
பிரான் தாள் போற்றி.

 இலக்குவன்  இன்னுயிர்  தனைக் காக்க
இலையது  எது வென்றே  தேடித்தேடி

லகுவாய்  இமயத்தை  இடம்பெயர்த்த -ராமபக்த
ஹனுமான் தாள் போற்றி.





போற்றிப் பாடினேன் புது வருடம் பிறக்கையிலே

சிறப்பொடும் சீரோடும் எம் வாழ்வு மலர்ந்திடவே

அறமும் அன்பும் அண்ட மெல்லாம் நிறைந்திடவே
அள்ளித் தாரும் உம் அருளை 
 


 

No comments: