Tuesday, January 19, 2016

பிறந்த நாள் வாழ்த்து


 

friend request ஒன்று

forever பந்தம் ஆனது...


வலையிலே வந்த நட்பு

 வளர்ந்து நீண்டு

 வலம் வரும் நட்பு
 

முகம் கண்டு வாராத
 அக வழி வந்த

 அருமையான நட்பு.
 

என்ன சமையல்
 என்று துவங்கி

 ஏராளமாய்ப் பகிர்தல்கள்.
 
இரண்டாண்டு ஒடியது
 இறுகியது எம் நட்பு.

 
தேர்ந்தெடுத்து வார்த்தைகள்

 தேனாய்ப் பேசுவள் இவள்

 குயிலும் குறுகிப் போகும்

 தையலிவள் குரலினிமையில்

 பாங்குடன் பணி செய்வள்

 பாசத்தை அள்ளி வீசுவள்..

புன்னகைக்கு அரசியிவள்

 கன்னமிடுவள் உள்ளத்தை

 குடும்பத்தின் வேரிவள்

 வடம்பிடித்து  வழினடத்துவள்.
 

நாளும் ஒன்று வந்தது

 நானும் அவளைக் காண...

 காந்தக் கண்களும்

 சாந்த பாவமும்

 பாந்தமாய் அலங்காரமும்

 பளிச்சென்ற புன்முறுவலும்

 பரந்த மனமும் கொண்ட

 புத்தனின் பாதை செல்லும்

 பூலோக தேவதையிவளோ
 

அவள் வீட்டிலே வீசும்

 அன்பின் அரும் வாசம்

 ரீங்காரமிடும் இன்றும்

 அந்த முதல் சந்திப்பு.

 
காலங்கள் கடந்திடுனும்

 குறையாத நம் நட்பு.
 

பிடி அவல் தந்து

பீடிலிருந்து மீட்டான்

குசலனைக் கண்ணனுமே

பிடிப்பும் துடிப்பு

பிடி என்று நீதந்தாய்

புத்த நெறி வழிகாட்டி..

 
பிறந்த நாள் இன்று காணும்

 பிரிய தோழி புவனா உனக்கு

 பெரிதாய் என்ன தருவேன்...?

வரிகள் வழினடத்த

 வாழ்த்துக்கள் ஒன்றைத் தவிர..

 

உலகிலுள்ள இன்ப மெலாம்
 உன் வாசல் வந்தடைய

 உள்ளத்து வேண்டுதலிது

 உள்ளத்து வேண்டுதலிது..

 என்றென்றும் அன்புடன்

 அகிலா

 

No comments: