Monday, June 27, 2016

தாத்தா பூ


ஐயோ..
காலடியோசை கேட்குதே..
கழுத்தைத் திருகி..
கழுவில் எனை ஏற்ற
களியாட்டம் போட்டு..
கயவர் கூட்டம் நெருங்குதே..

புதரிலே பரவிய என்னை..
பதறச் செய்யுதே..
பதர் இவரின்..
பாவக் கரங்கள்..

தவிப்பில்..எப்போதும்
தாத்தா பூக்கள்..

தலை கொய்யும் விளையாட்டாம்
தாத்தா பூ விளையாட்டு..
தலைமுறை போனாலும்..தொடரும்
இந்த விளையாட்டு..

தந்தார் யார் அனுமதி?
தாத்தா பூ எனைக் கொல்ல..
உயிர் தந்தவன் ஏனோ..
உறங்கிக்  கிடக்கின்றானே..!!

வெட்டும் கைக்கு..
விலங்கெங்கே...??
துண்டிக்கும் கைக்கு..
தூக்கு மேடை எங்கே....??

என் மனம் அழுகிறது..

தற்காப்பு..தெரியலையே
தாத்தா பூக்கள் போல
பல..
சுவாதிப் பூக்களுக்குந்தான்...

No comments: