Saturday, June 4, 2016

மனசே ரெடியா..

மனசே ரெடியா..

வளரும் பிள்ளைகள்..
தளரும்..நம் கைப்பிடி..
விலகும்..நம்மைவிட்டு..
விரும்பியே ஏற்கணுமிதை..

புடவை தலைப்பில் ஒளிந்தது போய்..
புது உலகம் காணப் புறப்படும்..

கடைகடையாய்  சுற்றியது போய்..
கார்டுடன் தனியாய்ப் போகும்..

அரவணைப்பில் அயர்ந்தது போய்
அடுத்த அறை தள்ளிப் போகும்..

வாய் ஓயாத பேச்செல்லாம்..
வரலாறாய் ஓர் நாள் ஆகும்..

இஷ்ட்டமேனு செய்த தெல்லாம்..
இப்ப வேணாம் அப்பற மாகும்..

ஆசையாய் சேர்த்த தெல்லாம்..
அய்யோ... old fashion ஆகும்

குழந்தடா..நீ என்றால்..
குமுறிக் கொந்தளிக்கும்..

வளர்ந்தும் இப்படியா என்றால்..
வளைந்து கழுத்து கட்டிக் கொஞ்சும்..

தோழியாட்டம்  சமத்தா இருன்னா..
அவள் அம்மா போல் நீ மாறு என்கும்..

அடுக்கிய அலமாரி அலங்கோலமாகும் ..
அழகிப்போட்டி நடை நடக்கும் ..அறைக்குள்ளே..

செக்கிழுத் தெண்ணை செழிப்பாகிய கூந்தல்..
சிக்கெடுக்கா..செம்பட்டை யாகும்.

எங்கே போறே ங்கற கேள்வி..
எதிரியாய் நமை எடுத்துக் காட்டும்..

யாரோடு போறே நு கேட்டாலோ..
ஆறாத சீன மாகும்..

பத்திரமா போ என்றால்..
பாப்பாவா நான் ..பதிலடிக்கும்..

ஏட்டிக்குப் போட்டி..
எப்போதும் வாதங்கள்..

வீட்டிலே..சிங்கம்..
வெளியிலே தங்கம்...

எதிர் வீட்டு மாமி
ஏகமாய்ப் புகழ்வாள்..
என்ன ஒரு சமத்துக் குழந்த..
என்னமா வளர்த்திருக்கே..
எனக்கும் சொல்லிக் கொடேன்னு..

அற்ப சந்தோஷங்கள்..
அரை நொடியில் பறக்கும்..
அனல் தெறிக்கும்...argument..
அடச்சீ..போ..விலகல்கள்..

அந்த நாளும் வரும்..
....
'என்ன இருந்தாலும்..
என் அம்மா போல வருமா.'.!!!
இன்று நான் சொல்வதை..
இவர்களும் சொல்லும் ..
இனிய காலம் வரும்..!!!

No comments: