Thursday, January 25, 2018

வல்லமை தாராயோ

மூட்டு வலி..முதுகு வலி
முணுமுணுப்பில் உறக்கம்
மறக்காமல் எழுப்பும் கடிகாரம்
முடிந்ததா இரவு..
விடிந்ததே விரைவிலென்று
வாரிச் சுருட்டி எழுச்சி..
"உனக்கென்ன ..
உபாதை ஒன்றுண்டா..
உரிய நேரத்தில் வந்து
உன் வேலை தொடங்குகிறாய்.."
சூரியனுக்கு சுளுக்கில்லை
சந்திரனுக்கு சளித் தொல்லையில்லை
நட்சத்திரத்துக்கு நரம்பு தளர்ச்சியில்லை
மேகத்துக்கு முதுகு வலியில்லை
அசதியுடன் விழித்தாலும்
அசத்தலாக்குகிறேன் என் நாளை
சூட்சுமம் அறிந்தேன்..
சுருங்கியவள் விரிந்தேன்.
மறையும் மதியும் மலரும் காலையும்
மறக்காமல்  சொல்லுமே சேதி
வலி கொடுத்த ஆண்டவன்..மன
வலிமையும் கொடுப்பான்
வழியும் திறப்பான்..
நாளைத் துவங்க..
நாளெல்லாம் திருநாளாக்க

No comments: