Monday, October 12, 2020

Brother

 For your eyes Shiv K Kumar

அறியா வயதில்

அப்பா..மரணம்..

அம்மா ்தம்பி தங்கையுடன்.

தாத்தா வீடு வாசம்...

தத்தித் தடுமாறி 

வாழ்க்கை..

வசவுகள்..

வைராக்கியம் ஒன்றே..

வஜ்ராயுதம்..

உள்ளூர் வேலையில்..

கொள்கை விட மறுத்து..

பெட்டியெடுத்து..

பொருள் தேட..

பெருநகர வாசம்.. 

புரியாத மொழி

புழங்க இம்மி இடம்

பொங்கிப் போட ஆளில்லாது

பொட்டல சாப்பாடு.

பொறுப்பாய் பணம் சேர்த்து..

உடன்பிறப்புகளை ..

கரையேற்றி..

விடுப்பில் ஊர் சென்று..

விடைபெறும் வேளை..

காலமெலாம் கஷ்டப்பட்ட 

அம்மாவின் கைபிடித்து..

அடுத்த லீவு வரும்வரை..

இவளுயிர் இருக்க ப்ராத்தித்து..

திருமணம் புரிந்து

தூக்கிப் போட்ட இடமெலாம்..

தனியாய் போய் பணியாற்றி

்தன்குழந்தைகள்..

தவிக்காமலிருக்க..

தனிமையில்..

தவமிருக்கும்..

தந்தைகள்..

தரணியில் பல உண்டு..

No comments: