Tuesday, February 16, 2021

என்ன பேசியிருப்பார்கள்

 என்ன பேசியிருப்பார்கள்?


அவரு கடைசியா யார்க்கிட்ட பேசினார்ங்க ? என்ன பேசினாரு?

இந்த உரையாடல் எந்த ஒரு துக்க நிகழ்ச்சியிலும் சாதாரணமாக நம் காதில் விழும்.


இந்த வண்டியில் போனவர்கள் என்ன பேசி இருப்பார்கள்?


'என் பொண்ணு இந்நேரம் வந்திருப்பா

' அம்மாவுக்கு ஃபோன் பண்ணி கவலைப்படாம இருக்கச் சொல்லணும்'

' தங்கை கல்யாணம் அடுத்த வருசம் லீவில முடிச்சுடணும்'

'ஊரிலிந்து வந்ததிலேர்ந்து வீட்டு ஞாபகமாகவே இருக்கு'

' comrades..let's get back to work ' என்று சொல்லியபடி பாதுகாப்பு ஏற்பாடுகள் , strategy என்று ஆணைகள் .


இப்படித் தான் அவர்கள் உரையாடல் இருந்திருக்குமொ?


எப்போது வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் தாக்குதலுக்கு ஆளாவோம் என்ற நிலை இருந்தாலும் ..

அடித்து சொல்கிறேன்..இவர்கள் உயிர் பிரியும் நொடிக்கு முன் கூட ..நாட்டுக்கும் வீட்டுக்கும் நல்லதே நினைத்திருப்பார்கள்.பேசியும்  இருப்பார்கள்.


எல்லாம் இருந்தும் நம் பேச்சு எப்படி இருக்கிறது?

இந்த நாடு எங்கே உருப்படப் போகிறது..அந்த்க நாட்டை பாரு ..இவனைப் பாரு என்று வெட்டிப் பேச்சும் வீண் விவாதமும் மேலோங்கி..

ஒவ்வொரு கட்டத்திலும் திசை திருப்பல்.

இனியாவது விழிிப்போம

இன்னொரு புல்வாமா தாக்குதல் 

இன்னுயிர்களை பறிக்காமல் இருக்க..

ஒன்றிணைவோம்.

ஓட ஓட விரட்டுவோம் 

ஒற்றுமைக்கு பங்கம் வரவைக்கும் 

தீய சக்திக்கு..


'He was a jawan. a jawan dies for the nation ' என்று பெருமையாக சொல்லும் ப்ரதீப் குமாரின் அண்ணன்.


' இப்படி செய்தால் நாங்கள் பயந்து போய் எங்க பிள்ளைகளை ராணுவத்துக்கு அனுப்பாமல் விட்டுவிடுவோமா 'என்று முழங்கும் முதிர்ந்த தாய்மார்கள்..

வணக்கங்கள் ..உயிர் நீத்தோருக்கும் அவர்களின் உயிரான குடும்பங்களுக்கும்


'Border " ஹிந்தி படத்தில் வரும் பாடல்.


Sandese aate hain 

. Humein tadpaate hain


. #Ki tum bin ye ghar soona soona soon a hai..


வாழ்வாதாரமாக இருந்தவர்கள் விட்டுச் சென்ற வெற்றிடம்..

salutes to the bravo


டைம் இருந்தால் பாட்டு கேளுங்க


https://youtu.be/u0OKVB3Yp-U

No comments: