Thursday, February 17, 2022

தாவணிப்_பெண்ணே

 அழகான படம் பார்த்ததும்..எதோ எழுதணும்னு தோணித்து..😄😄


#தாவணிப்_பெண்ணே


..


உன் விரலின் அழகு கண்டு..

விறகடுப்பும் நாணுமோ..?


உன் பட்டாடை பளபளப்பில்..

பளிச்சென்ற கலயமும் தலை குனியுமோ..?


உன் கூந்தல் பூச்சர மணம்..

கரியடுப்பின் வாசத்தை குறைக்குமோ?


உன் கையில் உரசும் வளையல்கள்..

ஜ்வாலையாக மாறுமோ?..


அடுக்களைக்குள் ..இந்த அழகி வர..

ஆண்டாண்டு காலம் காத்திருந்தேன்..


அவள் கை பட்டதில்..என்

ஜென்ம சாபல்யம் இன்று..


எனக்கிங்கு இடமில்லாமல் போனாலும்.

என் மனதில் நீயும்..

உன் மனதில் நானும்..

என்றும் இருப்போம்..

அழியா நினைவுகளோடு..😊😊

No comments: