Wednesday, June 14, 2017

ஒடும் மேகங்களே.ஒரு சொல் கேளீரோ

பஞ்சு பஞ்சாய் மேகங்கள்
பரபரப்பாய் ஓட்டமெங்கே
பருவ மழை பெய்யுமெப்போ
பாவி சனமும் வாடுதிங்கே..

கூடிக் கூடி கும்மியடித்து
கொட்டாமல் கலையும் கர்வமென்ன
மாநாடு கள் போதும்
மசோதாக்கள் போதும்
நிறைவேறட்டும் தீர்மானம்
நிறையட்டும் குளமும் ஏரியும்
வருத்தியது போதும் வருணா
வரம் தா நீயும்
வான்மழை பொழிந்திடவே
வையகம் உயிர் பெறவே..

No comments: