Friday, June 16, 2017

என் வீட்டுத் தோட்டத்தி

என் வீட்டுத் தோட்டத்தின்...

வருட மொரு விடுமுறை வரும்
விடாமல் செல்லும் அம்மா இடம்.
வளர்ச்சிப் பாதையில் ஊர் செல்ல
வாயைப் பிளந்து நான் பார்ப்பேன்.

மாறிப் போச்சே ஊர் என்றே
மலைப்பும் மகிழ்ச்சியும் தான் கூடும்.
அடிக்கொரு கடையென களை கட்டி
அணிவகுத்த பல மாடிக் கட்டிடங்கள்
நகையும் ஜவுளியும் நடக்கும் தொலைவில்
நள பாகமெல்லாம் செயலி வழியில்.

அல்லாடிய நாட்கள் இப்போ இல்லை
இல்லை என்பதெ இங்கு எதுவுமில்லை.
பாலைவனமாய் இருந்த இடம்..
பளபளப்பாய் இப்போ மாறிப்போச்சே.

வரவு அறிந்து வந்தார் பலர்.
'ஆளே மாறிட்டே' என் கண்ணே
அழுத்தி தலையை வார லையோ
அம்புட்டு முடியும் கொட்டிப் போச்சேனு
ஆதரவாய் என் தலை தடவி
அன்பில் அணைத்தாள் அம்மாவின் வலக்கரம்.

தோட்டத்தை சுற்றி வந்தேன்
தோண்டிய பல நினைவோடு..
புயலும் மழையும் வந்தாலும்
பூமியும்  காய்ந்தே போனாலும்
மாறாதது என்றும் ஒன்றுண்டு
மண்ணின் வாசத்துடன் என்வீடு
அதில்.
மலரத் தயாரான மல்லிமொட்டு.

No comments: