Monday, November 4, 2019

பக்கோடா..bond..

பக்கோடா..bond..

 அன்புள்ள சிங்காரச் சென்னை தோழமைகளே..
இந்த அடை மழைக்கு உங்கள் எல்லாருக்கும் ஒரு செட் பூரி் மசால் என் கிச்சனிலிருந்து..

ஆனால் மழைக்கு உகந்தது..  பக்கோடாதான் பண்ணி சாப்பிட்டு..பேஷா இருங்கோ..

தொப்பலா நனைஞ்சு, ஏழு கடல் ஏழு குழி தாண்டி வீட்டுக்குள் நுழையும்போது இழுக்கணுமே..ஆனியன் பக்கோடா வாசனையும் இஞ்சியும் ஏலமும் போட்ட டீயும்.
யார் முதல்ல வீட்டுக்குள் நுழையறாளோ அவர்கள் ட்யூட்டி ...கணவர் entry முதல்ல என்றால் கடலை மாவும் , கட் பண்ணி வெங்காயமும் போட்டு கமகமனு கைவண்ணம் காட்ட வேண்டியது தலையாய கடமை...மழையில் நனைந்து( நீந்தி) வரும் மனைவிக்கும் மகன்(ள்) க்கும் பக்கோடா நீட்ட...bond கெட்டியாகும். பக்கத்து வீட்டு பாட்டிக்கும் தாத்தாவுக்கும் பதமா எடுத்து கொண்டு போய்  கொடுக்கலாம்.

முதுமை நமக்கும் வரும்..மொறுமொறு சாப்பிட முடியாம போகும்..ஆனா மெல்லறதுக்கு இருக்கும் இந்த பக்கோடா நினைவுகள்..
அப்படியே..ஒரு பாட்டும் பாடிக்கலாம்.

அன்றொரு  நாள் .அதே மழையில்.
அவள் (ர்) இருந்தாள் என் அருகில்..நான்
அடைக்கலம் அடைந்தேன்..
ஆனியன் பக்கோடாவில்..
நீ அறிவாயே..,அடைமழையே

பக்கோடா பந்தம்..என்றும் நிலையானது..

No comments: