Tuesday, March 10, 2020

Holi

#சிறுகதை
#ஐயா_மாட்டிக்கிட்டாரு..

" எனக்கு பயமா இருக்கும்மா..அவங்க வந்தால் நான் இல்லைனு சொல்லிடறயா? நடுங்கும் குரலில் ராஜன்.

" இந்தக் குழந்தையை அவன்களிடமிருந்து காப்பாத்துப்பா' தெய்வத்தை துணைக்கழைத்தாள் கெளசல்யா..

' நீ வெளில வராதே..எப்படியும் சமாளிச்சு நீ இல்லனு சொல்லிடறேன்' சொல்லியபடி அடுக்களைக்குள் நுழைந்தாள்.

வாசப் பக்கம் சத்தம் கேட்டபோதெல்லாம் சப்த் நாடியும் ஒடுங்கியது.
திக் திக் என்று டிக் டிக் கடிகாரம் பயத்தை அதிகரித்தது.
செக்யூரிட்டி கிட்ட சொல்லி வைத்தாள் யாரயும் உள்ளே அனுப்பாதே என்று.
சொன்னா சொன்னபடி செய்துடுவாம்மா.ராஜன் அழாத குறையாக ..
படபடனு கதவை தட்டும் சத்தம்.
கீஹோல் வழியாகப் பார்த்தாள்.
'அவங்களே தான் அவங்களே தான். '

 இந்த செக்யூரிட்டி கிட்ட இத்தனை சொல்லியும் இண்டர்காமில் கூட கூப்பிடலையே..பாவி..பாவி..இனிமே இரு உனக்கு எல்லா பண்டிக்கைக்கும் குடுக்கற பட்சணம் கட் பண்ணிடறேன்னு கறுவிண்டே..கதவைத் திறக்காமல் வாயில் வந்த எல்லா ஸ்லோகமும் சொல்லிண்டிருந்தாள்.

' இப்போ திறக்கலைனா..விளைவுகள் ரொம்ப விபரீதமாகிடும் மாமினு ஒரு கட்டைக் குரல்.
கதவை திறந்து விட்டாள்.

' எங்கே உங்க பையன்..எங்கே ஒளிஞ்சிண்டு இருக்கான். டேய் நீ அந்த ரூம்ல போய் தேடுடா.நான் மத்த எடமெல்லாம் தேடறேன்னு ஆளாளுக்கு வந்திருந்த அஞ்சு பேரும் கையில் ஆயுதங்களோட ..

கட்டிலுக்குப் பக்கத்தில போர்வைகள் அடுக்கியிருந்த இடத்தில் போர்வையோடு போர்வையாக போத்திப் படுத்துக் கிடந்தான் ராஜன்.

ரூமுக்குள் வந்தவன் தேடியபடி இருக்க..பெட் மேலே இருந்த லாப்டாப்பில் Facebook messenger காட்டிக் கொடுத்தது 'active now' என்று.
இத்தனூண்டு ரூமில் ராஜனைக் கண்டுபிடிக்க அவ்வளவு கஷ்ட்டமா என்ன?

'மவனே..எங்கிட்டயா தண்ணி காட்டற..
கையில் இருந்த கலர் ரொப்பிய பலூனை போர்வையின் மேல் சரமாரியாக அடிக்க ஆரம்பித்தான் ராஜனின் ஜிகிரி தோஸ்த் ஜோஷி

"டேய் ..மாட்டிக்கிட்டான் டா.
மவனே..ஹோலி அன்னிக்கு கலரோட விளையாடமல் கம்முனு நீ இருப்ப ..நாங்க விட்டுருவோமா..அந்த கலர் பெயிண்ட்டை கொண்டாங்கடா..பூசித் தள்ளிடுவோம்.

பிச்காரிகளில் இருந்த வண்ணங்கள் சந்தோஷ ஆறாக மாற..
holi hai holi..holi hai holi..
வசந்த காலம் வரவேற்பு வீதிகளில் துவங்கியது.

No comments: