Tuesday, March 10, 2020

Holi

Holi hai holi

Happy holi to all my friends..
Have a color filled day

#doondays
Memories ..they keep our life moving.

கலர் கலர் பண்டிகை
கலகலக்கும் பண்டிகை.
வசந்த்காலப் பண்டிகை.
விளையாடும் பண்டிகை

கலக்கம் வரும் முதலில்
களமிறங்கினால்..
களிப்பு கொள்ளை அங்கே.
கலர் பூசிய முகமே
கிலி கொடுக்குமங்கே

வீசி எறியும் வண்ணம்
வீதியிங்கு மின்னும்
வயது மறந்து இங்கே
வாலிபமும் திரும்பிடுமே

பொரித்த உருளை வறுவலும்
பாதாமும் கோவாவுடன் குஜியாவும்
தயிரில் ஊறிய வடையும்
தாகம் தணிக்க பானமும்.
ஆட்டமது ஓயாதிருக்க
அதி சக்தி தந்திடுமே

ஆடி ஓடி ஓய்ந்த பின்னே
அழுக்கு போக ஓர் குளியல்
அப்பாடானு ஒரு தூக்கம்
அடடே .இதுவோ சொர்க்கம்

கவலை அடுத்து வருமே
கலரில் தோய்ந்த துணியதையே
கசக்கிக் போட வேணுமே
சுவரில் தெளித்த கலருமே
சுவடில்லாமல் அழிக்கணுமே..

வண்ணங்களின் பண்டிகை
எண்ணத்தை தூண்டியதே..
வாழ்ந்த காலங்கள் எல்லாம்
வந்து நினைவில் போகிறதே..

வணங்கிடுவேன் இறை யவனை
வாய்ப்பு ஒன்று தந்ததற்கு
வண்ணத்தின் விளையாட்டு வழி
வாழ்வை நன்கு ரசிப்பதற்கு

Life is so colorful..
Enjoy the moments..

No comments: