Friday, March 11, 2016

வயது..

வயது..
வயதே..
நீ ஏறினாய்
இறங்கியது...
என் இயக்கம்..

வயது  ஏற
வியாதி பெருக
வலி  ஏற
வலிமை  குறைய..

அழுகையில் தொடங்கி
மகிழ்ச்சியில் முடிய
விதியே..
வளையாதா..
உன் விதி..

( ஓடி ஆடி வேலை செய்து
ஒரு நொடியில் படுக்கையில் விழுந்து
ஒவ்வொரு கணமும் துடிக்கும்
ஓராயிரம் உள்ளங்களுக்கு
ஓர் அர்ப்பணம் இந்த கவிதை

No comments: