Wednesday, March 23, 2016

புத்தம் புது காலை..

good morning சொன்னது 
கொஞ்சியே..குயில்கள்..
பூபாளம் இசைத்தது..
பட்டாம் பூச்சிகள்..
கடைசி சொட்டு தூக்கத்தை
விட்டுக் கொடுத்து..
விரிய விழைந்த பூக்கள்..

பரீட்சைக்கு நேரமாச்சு
பதறியபடி..பள்ளிச்சிறார்கள்..
குழந்தைகளை பஸ் ஏற்றி
குட்டி மாநாடு போடும்...அம்மாக்கள்
jogging நு சொல்லி ஜகா வாங்கி
jolly அரட்டை அடிக்கும்...அப்பாக்கள்
மருமகளுக்கு டிமிக்கு கொடுத்து
மாங்கு மாங்கென்று 
exercise செய்யும்..மாமியார்கள்
மாமி கொடுத்த காபி!(கஷாயம்..) மறக்க
MTR வாசலில் க்யூவில் நிற்கும்..மாமாக்கள்..
காதலியின் தரிசனம் காலையிலேயே கிடைக்க
காத்துக் கிடக்கும்...கட்டிளங் காளையர்கள..
senior citizens சிரிப்பது எப்படினு ..
seriousஆ கத்துக்கும்..laughter clubs
(என்னையும் கேட்டார்கள்.. கொஞ்ச நாள் போட்டும்னேன்)
வாக்கிங் வந்தும் வானத்தை பார்த்து
வாழ்க்கை யோசனையோடு ஒரு சிலர்
இப்படி தினம் வந்து போவோரை ந்ம்பி
வியாபாரம் நடத்தும் ஒரு கூட்டம்....
காலை வீசி நடக்கத் தானே வந்தே.
கவிதை என்ன வேண்டிக் கிடக்கு..
கடமை நினைவில் வர..
நடக்க ஆரம்பித்தேன்...
இந்த நாள் நல்ல நாளாய்
எல்லாருக்கும் இருக்கனும் என்று..
good day to all

No comments: