Wednesday, March 3, 2021

கோவில் மணியோசை

 கோவில் மணியோசை


பிரகாரத்தை சுற்றி முடித்து

பகவானே நான் சொன்னதெல்லாம்

நினைவில் வை..

பாவி எனக்கு உன்னை விட்டா யாரென்று

பக்திப் பரவசத்தில் இன்னோரு மீள் வேண்டல் தொடங்க

படியைத் தொட்டு கும்பிட்டபடி

பவ்வியமாய் நுழைந்த ஒருவர்

பிடித்து அடித்த கோவில் மணி


'பரமன் என் அருட்பார்வை 

பேதையே உனக்குமுண்டு

பதறாமல் போய் வா'வென

பாசமுடன் சொன்னதோ..


கோவில் மணியோசை..

இன்னும் ஒலிக்கிறது..

No comments: