Monday, March 28, 2022

தங்கமணி..எங்கே நீ..

 Thangamani Srinivasan..three years gone without you. But no day passes without thinking of you .

 its not just a post to write about a mother in law. Just trying to learn the life of love and purely unconditional affection you poured on each and every member of the family and to anyone you came across.


தங்கமணி..எங்கே நீ..



2008..ஒரு மத்தியான நேரம். ஃபோன் பெல்லடிக்க..மறுமுனையில் தங்கமணி..(என் மாமியார்)..

என்ன பண்றே அகிலா..

ஒண்ணும் இல்லமா..இப்போதான் ஐஷுவோட ஒரு fight ..ஒரே மூட் அவுட்.

நீங்க சொல்லுங்கோம்மா..என்ன விஷயம்..

நான் சொல்றத கொஞ்சம் செய்வியா..எப்போதும் போல ஒரு அன்பு வழியும் தொனியில்..ம்ம்ம்ம்..என்னது ம்மா..

ஒரு கவிதை எழுதேன்.தலைப்பு .'தலைமுறை இடைவெளி'..

ஐயோ சாமி..அம்மா..are you OK? யாரைப் பார்த்து என்ன கேட்கிறேள்..no no no..ஷாருக் ஸ்டைலில் நான் அலற..நாளைக்கு அனுப்பு எனக்கு .bye ..என்றாள்.

இப்படியாக என் முதல் கவிதை அரங்கேறியது ..எனக்குத் தெரியும் உன்னால் முடியும்னு என்று mail அனுப்பினாள்..

அதற்கு பிறகு சந்த வசந்தத்தில் எல்லா கவியரங்கியிலும் என்னை சேர்த்து விடுவாள்..தங்கமணி மருமகளே..கொஞ்சம் இலக்கணம் கத்துக்கோயேன் உன் அம்மாவிடம்..செவிடன் காதில் ஊதிய சங்கு தான்...

நீ எழுது உன் பாணியில் என்பாள்.


கமகமனு சமையல்..

கைவந்த கலை..

கவிதை எழுதி..

கடவுளைக் கண்டாள்.

கணினி அவளுக்கு

கைப் பொம்மை

காமெரா கண்டாலே

காண்பதை படம்பிடிப்பாள்

குழந்தைகள் கண்டால்

குறையும் வயது

கடுகடு முகமே

கண்டதே இல்லை..

கடகடனு சொல்வாள்

கேட்டதும் ராகங்களை

குளுகுளு பானங்கள்

கொழுப்பாய் குடிப்பாள்

கொல்கொல் இருமலில்

கழிப்பாள் இரவுகளை..

ஆட்டோ பாட்டி பேரிலிவள்

ஆடாது அசையாதாள்

ஆட்டும் துன்பத்திலும்..

அன்பு தான் வெல்லும்

ஆணித்தரமாய் சொன்னாளே

அனைவரின் பிரியம்

அன்பின் உயரம்..

ஆண்டாள் அன்பினால்..

அடைந்தாள் அவனடி..

அரைமூச்சிலும்

அரை மயக்கதிலும்

அருகே வா என்றாள்..

அம்மாவை அழைத்துவா.

அருமையா பார்த்துக்கோ

அவளுக்கும் நீ வேணுமென்றாள்.

மனமொன்று வேண்டும்..தங்க

மணி போல் என்றும்.

மாய்ந்து பேசுகிறார்..நீ

மறைந்த பின்னும்..


தங்கமணி..

எங்கே நீ..

No comments: