Saturday, March 26, 2022

Wedding anniversary

 நேற்றோடு நிறைவு

இருபத்து மூன்று வருட

இல்லற வாழ்வு..


அந்த நாள்..

வளையம் விட்டு

வைரம ணிந்தது என் காது..

வளையல் இதுவரை

 காணா கையோ..

வடித்தது ரத்தம்..


சிகை அலங்காரம் அத்தைகள் செய்ய..

சித்திகளோ... சுத்தி சுத்தி வேலை செய்ய..

parlour போகாமலே..

பளிச்சென்று make up..(courtesy Mrs Raghu Nathan)

தாழம்பூ பின்னல்..

தலையை கனமாக்க..(ஏற்கனவே நமக்கு உண்டு..!!!)


அண்ணனும் தம்பிகளும்..

ஆர்கெஸ்ட்ரா வுடன் ஆட..

bindaas life மாறி..

பந்தத்தில் இணைந்த நாள்..


புகைப்படங்களை புரட்டினேன்..

ஒல்லியாய் இருந்தவரெல்லாம்

oh..இப்பொ ஒரு சுத்து பெருத்தாச்சு..

உயிரோட்டமாய் இருந்த சிலர்..

உலகம் வேறு போயாச்சு..

miss those loved ones..


நகரும் வாழ்க்கையோடு..

நகரம் பல சென்றாலும்..

நிற்பது நினைவில்..

இன்னாள்  என்றும்...பொன்னாளாய்..


No comments: