Thursday, August 3, 2017

அரிசி மாவு

அரிசி மாவு..
முறுக்கினால் முறுக்கு
பிழிந்தால் தேன்குழல்
தட்டினால் தட்டை
உருட்டினால் சீடை..
கடலை மாவு கலந்தாலோ
கிடைக்குமே பலசுவை.

அளவென்பது அதிமுக்கியம்
அமைந்தால்..அது அதிர்ஷ்டம்.

வாயில் போட்டதும்...
வெண்ணெயாய் கரையும்..
கல்லாய்ப் போகும்.. நம்
பல்லும் பதம் பார்க்கும்.
உப்பும் உறைக்கும்..சிலசமயம்
சப்பென்று போகும்.

சூடான எண்ணெயில்
சிக்கித் தவித்தாலும்
வென்று வெளிவருமே
சுவைமிகு பதார்த்தமாய்..

மூலப் பொருள் ஒன்றேதான்..
முகம் பல காட்டும் மாவுமிங்கே..

வாழ்க்கைத் தத்துவம் இதுதானோ?
வெறும் மாவாய் இருந்திடல் வீணன்றோ?

No comments: