Thursday, August 3, 2017

Swacch bharath

swachh bharath
வாசல் விட்டு இறங்கியதும்
வரவேற்கும் ..
வாரி அள்ளப்படாத குப்பைகள்
கண்ணும் முக்கும் மூடி
கடப்போம் கண்டு கொள்ளாமல்.
காரிலிருந்து வீசி எறிவார்..
காரிருளில் வந்து வீசுவார்..
காய்கறிக் காரம்மாவும் வீசுவார்.
குப்பை மேடு கோபுரமாகும்
கொஞ்சிக் குலாவும் நாயுமங்கே.
பக்கத்தில் பானி பூரிக்கடை
பறக்கும் ஈயும் கொசுவும்.
பிழிந்த பழங்களும் தோலுமங்கே
பசியாற்றுமே பல உயிருக்கங்கே
எட்டிப் பார்ப்பாரே எலியாரும்
என் பங்கு எங்கேயென்றே..
பச்சை சிவப்பு டப்பாவென்றே
பிரிக்கச் சொல்லி சட்டம்
நேரம் ஏது இத்ற்கென்றே
நியதிகள் உடையும் சாபம்.
garden city அன்று
garbage city அல்லவோ இன்று.
swachh bharath திட்டமெல்லாம்
சரிப் படாது நமக்கென்று
சுத்தமா என் வீடிருக்க..
சுத்தி எப்படி இருந்தாலென்னெ?
நாடும் வீடும் ஒன்றென்ற
நல்ல சிந்தனை பிறக்கணுமே
நானென்ன செய்ய முடியுமென்று
நாமும் தப்பித்து ஓடாமல்..
நம்மால் முடிந்ததை செய்வோமென்று
நல்ல நினைவும் செய்கையுமே
நல்ல் பாதை காட்டிடுமே

No comments: