Thursday, August 3, 2017

நானென்றால்..அது இவர்களும்..நானும்..

நானென்றால்..அது
இவர்களும்..நானும்..

புகைப்படக் குவியலகள்
புகை மூட்டத்தில் ..
பின்னோக்கிய வருடங்கள்

மடியில் தாலாட்டியபடி
மார்பில் அணைத்தபடி..

சாதம் ஊட்டியபடி
சாய்ந்தாடம்மா ஆடியபடி

முதுகி லேற்றியபடி
மூலையில் ஒளிந்தபடி..

கை கோர்த்தபடி
காலைப் பிடித்தபடி..

அலங்காரம் செய்தபடி
ஆடிப் பாடியபடி.

பின்னால் ஓடியபடி..
பிரிவை அறியாதபடி..

காலம் சுழலும்..

கழுத்தைக் கட்டியபடி கேட்டாள்
' நானாம்மா ..இது என்றே'
நானும் சொன்னேன்..
'நாம் தான் இதுவென்றே'

No comments: