Sunday, September 13, 2020

சதாப்தி

 வாட்ஸப்பிருக்க..வாய்ஸ் கால் எதற்கு?


சதாப்தியில் செட்டில் ஆனதுமே..

சகலருக்கும் சகட்டு மேனிக்கு ஞானம் வரும்.

ஹலோ ஹலோக்கள் லோ லோ என்று முழங்க


லோக க்ஷேமத்தில் தொடங்கி..

லோக்கல் பாலிடிக்ஸ் வரை..


பக்கத்து சீட்டு மாமா..மாமிக்கு போட்ட ஃபோன்..( ஒட்டு கேக்கலைப்பா..அவர் பேசினது ஊருக்கே கேட்டது)😀


ஒண்ணு கேட்க மறந்துட்டேனு ஆரம்பிச்சவர் தான்..


ஒருலிட்டர் பாக்கெட்டா?

இரண்டு அரை லிட்டரா.? 


ஃப்ரீஸரில் வைக்கணுமா..

Chill tray லயா?..அந்த


a2b பக்கோடா..

அந்தரா..பாஹரா..?


கல்யாண முறுக்கு

கடக்குனு போய்டாதா..?


வலது கரம் வந்தால்

வார்க்கணுமா தோசை?


அரிசிக்கு ஜலம் எத்தனை?

பருப்பும் வைக்கணுமா?..


அடுக்கிக் கொண்டே போக..

ஆவேசக் குரலில் மாமி..

'அட ராமா..

நல்லி கடையிலே..

நாலாயிரம். புடவை குவிய்லில்

நல்லதா ஒண்ணு தேடிண்டு இருக்கேன்

நிம்மதியா ஷாப்பிங் பண்ண விட மாட்டீரோ..

நானே வந்து எல்லாம் பார்த்துக்கறேன் என்று இணைப்பை துண்டிக்க..


'அவள் அப்படித்தான்" என்று ஒரு ஸ்மைலில் சொல்லி..அசடு வழிய..


அடுத்தடுத்து..செல் ஃபோன் மணிகள் சிணுங்க..

ஆறு மணி நேரம்..அட்டகாச entertainment எனக்கு.


வண்டியில் ஏறினதும் கவச குண்டலமான hearing aid ஐ switch off செய்துவிட்டு..

அப்பா..அமைதியாய்..ஜன்னலோர சீட்டில் 

தாண்டிச் செல்லும் மரம் செடியை ரசித்தபடி..பழைய நினைவுகளை அசை போட்டபடி..

No comments: