Monday, September 21, 2020

பாபா விஜயம்

 மத்யமர் நண்பர் Ramani யின் பதிவுக்கு என் பழைய புலம்பலை எச யாக சமர்ப்பிக்கிறேன்.


Madhya Pradesh life..


பாபா விஜயம்..


குரோம்பேட்டை குச்சு வீட்டிலும்..கரோல் பாக் கிடங்கிலும் இருந்து...மத்திய பிரதேசம் transfer.. Indore station எறங்கி நல்ல தமிழ் ஹோட்டலில் மூக்க புடிக்க மொக்கிட்டு..கடைத்தெரு எல்லாம் பராக்கு பார்த்துண்டு..பயணம் மண்டலேஷ்வர் என்ற project site நோக்கி....நாங்க போற கார் தவிர..

ஆள் அரவமே இல்லாத ரோடுகள்..இரண்டு பக்கமும் கண்ணும்கெட்டிய வரை ஒரு மனுஷப் பிறவி தெரில..

என் கூட வந்த உடன் பிறவா தம்பி..'அக்கா..நாம எங்க போறோம்.. 'என் அம்மாவோ..'இந்த எடத்துல கைக்குழந்தைய வெச்சுண்டு. எப்படி?


 'அதோ ..அந்த மலைக்கு பின்னாடி தெரியுதே..அங்கதான்..நம்ம வீடு..'

அகத்துக்காரர் சொல்ல...ஆர்வமாய் தலை ஆட்ட..ஒரு குட்டித் தூக்கம் முழிச்சு..இப்போ நாம எங்கே இருக்கோம்....திரு திரு முழியுடன் நான்


கம்பெனி கேட்டில் security salute அடிக்க..ஓ..வீடு வந்தாச்சு..

ஒரு வீட்டுக்கும் இன்னொரு வீட்டுக்கும்..போ....திய இடைவெளி... மைக் போட்டு தான் கூப்பிடணும்.


 அத்வானம்..அமைதி..இதெல்லாம் பழகாத ஒன்று..கடைத்தெருவிலே குடி இருந்து.. காட்டுக்கு நுழஞ்சாச்சு..

பக்கத்து வீட்டு பம்ப்பா(Bengali)..ஓடி வந்தாள்..அறிமுகம்..'bhabhiji ..dhyan rakhna..babaji idhar bahut hai.'...பய பக்தியோட தலையாட்டினேன்..பூச்சாண்டி பயம் ரொம்ப போல இருக்கு..கதவ சாத்தியே வைக்கணும்...


வந்து போனவரெல்லாம் இதே பாட்டு..எங்கடா..வந்து மாட்டிண்டோம்..

காலைல கண் விழிச்சா..விந்திய மலை தரிசனம்..காம்பவுண்டுக்குள் இருக்கும் கோயில் மணி..ஆஹா..சுகமோ..சுகம்..


தோட்டக்காரன் 'கல்லு'...என் பேர் என்றான்..madam..

babaji idhar bahut hai..கதவ சாத்தி வைனு..அதே பாட்டை சுருதி பிசகாம பாடினான்..


என்னடா இது வம்பு...

வேலை செய்யும் மன்னு பாய் வந்தாள் அவள் பெண் சந்தா வோடு..அவளும் அதே பாட்டு பாடினாள்..


கதவிற்க்கு அடியில் துணி அடை என்றாள்..ஷெல்ப் எல்லாம் மூடி வை..babaji ..என்றாள்..


பத்து மணி..பக்கத்து (so called) வீடு..state bank..பியூன் வந்தார்..திறந்தார்..கதவை..ஓடி வெளில வந்து நின்னார்..அட ராமா..இப்படி என்ன ஓட்டம்..கேட்டேன் அவரை..

பணப்பெட்டி திறக்குமுன்..babaji வெளிய போகணும் என்றார்..யோவ்..பூட்டின வீட்டில எங்கடா உங்க babaji....நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் நீனு..ஒரு லுக் விட்டார்....


என்னமோ போ..குழந்தை க்கு ஜுஸ் குடுக்கணும்..ஆரஞ்சு புழிஞ்சு தோலை வீசி எறிய..ஒரு army சத்தம் சரசரனு..குப்பைலேர்ந்து..


கிச்சன்கார்டன்ல..கத்திரிக்காய்..கண்ணைப் பறிக்க..பாத்தியில் கால் வைக்க..கருப்பா..பெருசா ஒண்ணு நகருது..ஐயோ..ஒட்டம் தான்..சீ..சீ..எதோ பிரம்மை..


செம்ம வெயில் கொளுத்தும்.. தண்ணீ ரொப்ப கூலருக்குள் பைப்பை சொருக....குபீர்னு எதோ ஒன்னு வெளிய ஓடித்து..ஐயோ..மூச்சே நின்னு போச்சு..


கல்லு வந்தான்..கதையெல்லாம் சொல்ல..நக்கலாய் ஒரு சிரிப்பு..woh  kuch  nahi kartha  madam..இது எங்கள் குல தெய்வம் என்றான்..


என் குட்டி வால்..காலுக்கு பின்னாடியே..babaji..ஊர்வார்....எங்க எப்பொ..ப்ரசன்னமாவார்னே தெரியாது..


பால்காரர்் வருவார்..பாபாஜி..இன்னிக்கு எங்க என்பார்..அதோ ..அந்த தண்ணி வெளிய வர குழாயில் என்பேன்..போ..ஊதுவத்தி கொண்டா என்பார்..சாக்கடைக்கு..சந்தன அகர்பத்தி காட்டுவார்..பாபாஜியோ..தலைய மட்டும் வெளியே காட்டிட்டு..உனக்கும் பேப்பே..உங்கப்பனுக்கும் பேப்பேனு..உல்லாசமா..பைப்புக்குள்ளே..


சாயந்திரம் 5 மணிக்கு கரெண்ட் கட் ஆகிடும்..அப்பறம் அடுத்த நாள் 12 மணிக்கு தான் வரும்..

காத்துக்கு கதவும் திறக்க முடியாது..காலை கீழ வைக்க கூடபயம்.வழவழனு ..எங்கியாவது..பாபாஜி..விஜயம்..பாமா விஜயம் மாதிரி..


இது என்ன மர்ம தேசம் மாதிரி.....

பயத்தில் ..பூசைகள்...இன்னிக்கு யார் உங்க வீட்ல விருந்தாளினு கேலிகள்....

இன்னிக்கு concrete jungle ல ....எந்த புத்துலேர்ந்து எந்த. பா......இருக்கும்னு புரியாமல் வாழ்க்கை ஒட்ட்ம்..

மறக்க முடியாதது..அந்த

ரம்மியமான சூழல்..நர்மதை நதி சலசலப்பு...

அமைதியான மக்கள்..கொட்டும் மழை ஒருபக்கம்..காய்ந்த பூமி மறுபக்கம்..அஹில்யா தேவி கோட்டை..chanderi புடவைகள்..

எத்தனை நினைவுகள்..

No comments: