Sunday, September 20, 2020

நன்றி சொல்லவே

 நன்றி சொல்லவே'..


"பெட்டிஷன் பெரிய நாயகியா' இருக்கக் கூடாதென்று..

பிரகாரத்துக்குள் நுழையும் முன் எடுத்த பிரதிக்ஞை எல்லாம் பொடிப் பொடியாக..

 பிரார்த்தனைகள் போட்டியில் நிற்க..

 

நமஸ்கரித்த வேளையில்..

நினைவில் வந்தது..


அடடா..

நன்றி சொல்ல மறந்தேனே..நீ

நீ நடத்திக் கொடுத்த நல்லதற்கெல்லாமென்று..


'நல்ல பக்தை தான்  போ' ...நீ

நிந்திக்க மாட்டாய் ..நம்பிக்கையுண்டு..


சன்னதி தேடி ஓடினேன்..இதெல்லாம்

சகஜம் என்ற தோரணையில்

சிரித்தபடி நீ ..

No comments: