Friday, May 7, 2021

மழை

 வருந்தி வருந்தி அழைத்தும் 

வராமல் படுத்திய நீ

வந்தால் வா..

வராவிட்டால் போ

வேதனைதான் விதி என்றால்..

வேண்டுதலா..மாற்றப் போகிறதென

மனம் துவண்ட வேளை..

வாசனையுடன் வந்து ..

வாசல் தட்டினாயே

வேகமான காற்றுடன்


வான் மழையே..

வான் மழையே

No comments: