Thursday, August 11, 2022

தாயின்_மணிக்கொடி_பாரீர்

 



#செவ்வாய்_கவிதை


#தாயின்_மணிக்கொடி_பாரீர்



Thanks sankari CA 


தறியிலே நெய்த கொடி

பறையரை வென்று

நிலைநாட்டிய கொடி

நொடியில் வந்ததல்ல சுதந்திரமென்று...

நித்தமும் உணர்த்தும் எம் கொடி


சிறை விடுத்து..

சிறகடித்து ..சீறிப் பறக்க

தடை உடைத்து

தரணி வெல்ல..

தாரகம் சொல்லும் எம் கொடி.



அன்பில் ..

ஆன்மீக த்தில்

இயலில்

இசையில்

உழைப்பில்

ஊக்கத்தில்

எந்திரமயமாக்கலில்.

ஏவுகணை சோதனையில்

ஐக்கிய சபையில்..

ஒருமைப்பாட்டில்

ஓங்கும் புகழில்

ஒளடத ஆராய்ச்சியில்


கொடிகட்டி பறக்குதே..

கொடி கட்டிப் பறக்குதே..இந்தியக்

குடிமகனின் பெருமை.



தலைமைப் பொறுப்புகள் பல

தானாய் வந்து சேருதே..

இணையில்லை இந்தியர்க்கென்றே..

அண்டை தேசமெலாம் ..வியக்குதே


கடமை உணர்ந்த மக்களும்

கைக் கோர்த்த.. நாள் வந்ததே..

தூய்மை நாட்டை உருவாக்கும்

திண்ணமும் பிறந்ததே..


வீழும் இந்த தேசமென்று...

பாழாய்ப் போனோர்..

கண்ட கனவு..

பாதாளத்தில் வீழ்ந்ததே..


பாரத மணிக் கொடியும்

பட்டொளி வீசிப் பறக்குதே..

எட்டுத் திக்கும் எம் புகழும்

வெற்றி முரசும் கொட்டுதே


வீடு தோறும் ..தேசியக் கொடி

நாடெங்கும் ஒற்றுமையின் ஒலி..

சங்க நாதம் ஒலிக்குதே..

இதயங்கள் இணையுதே..



நிமிர்ந்த நெஞ்சுடன்

நேர்கொண்ட பார்வையுடன்

தாயின் மணிக் கொடி வணங்குவோம்..

தரணியில்..நமக்கு

ஈடில்லை என உணர்த்துவோம்.






















 

No comments: