Tuesday, March 10, 2015

பரீட்சைக்கு நேரமாச்சு -2


 

இரண்டாவது பரீட்சை இன்று

இரண்டானது வீடு இங்கு

 

வரலாறும் பூகோளமும்

வகைவகையாய்  வரைபடமும்

குடியியலும் பொருளியலும்

குவிந்தனவே பாடங்களாய்..

 

ஆழமாய் அணுகினாலே

ஆர்வந்தான் பொங்கிடுமே

அழகான அவணிதனை

ஆராதிக்கத் தோன்றிடுமே…

 

ஆடுபோல   மேய்ந்தபடி

ஆசையொன்று இல்லாமல்

அங்குமிங்கும் படித்ததனால்

அல்லல்தான்  மிச்சமிங்கே..

 

சமூகவியல் பாடமிதை-

சங்கடமாய் நினையாமல்-வரும்

சந்ததிகள் உணர்ந்தாலே

சமூகமிங்கே உயருமன்றோ?

 

No comments: