Monday, March 9, 2015

பரீட்சைக்கு நேரமாச்சு


பத்தாம் வகுப்பு பரீட்சை இன்று
பத்தாம் வகுப்பு பரீட்சை இன்று
பதற்றத்தில் இங்கே வீடுகள் பலவும்
பத்தாம் வகுப்பு பரீட்சை என்று

பாலை சாப்பிடு பாதாம் சாப்பிடென
பார்த்து வளர்த்த பச்சைக் குழந்தையின்
பத்தாம் வகுப்பு பரீட்சை இன்று.
பத்தாம் வகுப்பு பரீட்சை இன்று.

பட்டியல் போட்டு படிக்க நினைத்தும்
பத்தலயெ நேரம் என்பாடம் முடிக்கவென
புலம்பும் புதுயுக என் பெண்னவளின்
பத்தாம் வகுப்பு பரீட்சை இன்று.

பாங்குடன் படித்த பாடமெல்லாம்
பதிய வைத்த விதி முறையுடனே
பட்டென பதிலாய் எழுதனுமே என்று
படபடப்பில் பெற்ற உள்ளமிங்கே..


பத்தாம் வகுப்பு பரீட்சை தானே
பதட்டம் ஏனென்று ஒரு பக்கம்
பட்டம் வாங்க முதல் படியாய்
பத்து தானே பாதை காட்டும்

பாதை ஒன்று தெரிந்துவிட்டால்
பதைபதைப்பும் கொஞ்சம் குறையுமடா..
பத்தாம் வகுப்பு பரீட்சையடா
பார்த்து நன்றாய் எழுதுங்கப்பா




No comments: