Monday, March 16, 2015

பரீட்சைக்கு நேரமாச்சு- 4


கணக்குப் பரீட்ச்சையின்று
கலங்காதே கண்ணே நீ

தலையணையாய்ப் புத்தகங்கள்
தலைசுத்தும் கணக்குகளும்
பிழையின்றி செய்திடவே
பிள்ளையாரை வேண்டுவனே..

வரைபடமும் வடிவியலும்
வளைகோடும் நேர்கோடும்
வளையாது வரைந்திடவே
வேலவனே அருள்வாயே..

மனப்பாடம் செஞ்சுவைத்த
கன அடியும் பரப்பளவும்
நினைவினிலே வந்திடவே
வாணியுனை வேண்டுவனே

பிணக்கிங்கே கணக்கென்ற
மனக்கணக்கை மாற்றியிங்கே
மனதுவைத்து படித்தாலே

மாமலையும் ஓர்கடுகாம்..

No comments: