Sunday, March 29, 2015

தங்கமணி…

வித்தை உன்னுள் உள்ளதென்று
அத்தையவள் சொன்ன வேளை
சித்தம் சிதறியதோ என்றே
சத்தம் மிட்டு சிரித்தேனே

சிந்தையினை சீராய் செலுத்து
விந்தை பல காண்பாய் என்றே
விதை ஒன்றை விதைத்தாளே
கவிதைக் கனலதை மூட்டினாளே

படைத்தவனுக்குத் தானா பாசுரங்கள்…?
அடைபட்ட  அடையாள மொன்றை
தடை யுடைத்து வெளிக் கொணர்ந்த
தாயுமான தங்கமணிக்கு தலைவணக்கம்.


No comments: