Friday, March 13, 2015

பரீட்சைக்கு நேரமாச்சு -3




இரண்டாம் மொழியாம்

இந்திப் பரீட்சையின்று..

இலக்கணமும் இலக்கியமும்

இயல்பாக அழகாக…..

ஈரடிச் செய்யுளிங்கே

ஈர்க்குதே காந்தமென…

தாகூரின் தங்கவரிகள்

தலைநிமிரச் செய்திடுதே

கபீரிவரின் கவிதைகளோ

களிப்பின்பம் ஊட்டிடுதே..

வாழ்க்கை வரலாறுகளோ

வாழும்நெறி சொல்லிடுதே


படைப்பாற்றல் சோதிக்க

பாகமொன்று உண்டுங்க 

கட்டுக்கதை எழுதாமல்

கட்டுரையை எழுதிடுங்க..

பிட்டுபிட்டு வையுங்களேன்

புரட்சியான சிந்தனையை

எட்டிக்காய் இல்லங்க 

எகிறியுமே  ஓடாதீ ங்க  

கிட்டுமுங்க  மதிப்பெண்ணும்

நாட்டமுடன் படித்தாலே..

இந்தியென்ன தமிழென்ன

இன்பமுடன் படியுங்க.

இந்தியாவின் குடிமகனாய்

இறுமாந்து நில்லுங்க....

No comments: