Wednesday, February 1, 2017

குருவே

அனுஷத்தில் அவதரித்த
அமைதியின் உருவே..
அன்பருளம் அதையறிந்து
அருள் பொழிந்த கடலே..
ஆசி தரும் அற்புதமே
ஆசை துறந்த மாமணியே
காஞ்சி மகானிவரின்
கண்கள் சுடரொளியே
கண்டு வணங்குவோரின்
கவலைகள் யாவையுமே
கரைந்ததே கற்பூரமாய்..
கண்டதில்லை உம்மை..
களித்தோம் தெய்வத்தின் குரலை..
கரம் குவித்து வணங்கிடுவேன்..
காமகோடி குரு உனையே..

No comments: