Thursday, February 9, 2017

யாதுமாகி

யாதுமாகி..

அரைப்பான் ..அவிப்பான்.
துடைப்பான் ..துவைப்பான்..
 வறுப்பான்.. தேய்ப்பான்
சுடுவான் ..குளிர்ப்பான்..
எந்திரம் இவையெல்லாம்
என் திறன் முன் எம்மாத்திரம்
அடக்கினாய் உன்னுள்ளே..அது
அந்தக் காலம்..

அடுக்கினாய் வகைக்கொன்றாய்
அடுக்களையில் அட்டத்தில்..
அடக்கினாய் ஒரு தட்டலால்
அது இந்தக் காலம்.

அப்போதோ..இப்போதோ..
அவளன்றி அசையாது..
அணு கூட எப்போதும்.
இயங்கினாள்..இயக்கினாள்..
இயந்திரங்களையும் மந்திரத்தால்..
இல்லாள்..இவளிலையே..
இயங்காது ஏதுமிங்கே.

No comments: