Wednesday, February 1, 2017

பிரியாவிடை

பசுமை நிறைந்த பள்ளி வாழ்வு
பிரியா விடையுடன் ..
பாடித் திரிந்த பறவைகள்..அவரவர்
பாட்டைப் பார்க்க பறக்கும் நேரம்..

ஆசையாய் வளர்த்த கிளிகள்
அடுத்த நாள் முதல்
அங்கு வராது போகுமேனு
அள்ளித் தந்த அன்புடனும்
ஆசி வழங்கிய ஆசிரியரும்..
வாட்சப் வழியே..என்
வணக்கமும் உண்டு..
வினாத்தாளும்் உண்டு..
விளக்கமும் உண்டு..
வெற்றி பெற உதவுவேன்
வாஞ்சையுடன் வழியனுப்பல்

அருமைத் தோழமை..
அழுகையும் தேற்றலும்
அங்கே காணலையே..
கண்ணில் ஒளியோடு
கையில் சுடரோடு
கம்பீர் வலம் வந்த
கண்மணிகள்் கண்டேனே..
பள்ளிச் சினேகிதம்..
கொள்ளை இன்பமே.

ஊடகம் இருக்கு..
உனக்கென எப்போதும்..
நானிருக்கேன் என..
நண்பர்கள் நல்மனம்..
சிரிப்பும் கேலியுடன்..
செல்ஃபி செல்லங்கள்..

மணி அடிக்கும் முன்னே
மண மணக்கும்..
மஞ்சூரியனும்..
மசாலா தோசையும்..
மாய்ந்து பாய்ந்து
மடக் மடக்கென..
முடித்த காலமது
மறுபடி எப்போ..
கடைசி பெஞ்சில்
கலாட்டாக் கதைகள்
கண்ணு சொக்கிப்போய்
கையும் களவுமாய்
கிளாஸை விட்டு வெளியேறி..
காண்டீனில் காத்திருந்த
காலம் வருமா..
சோக கீதம்  ..
சொல்ப நேரம்
சிட்டாய்ப் பறந்தனர்..
சிரித்து மகிழ்ந்தனர்..
வரப்போகும் நாளுக்கு
வரவேற்பு ..
வருங்காலம் வளமாய்..
வாழ்த்து மழையுமங்கே..
ஆடுங்கள்..
பாடுங்களென..
அரங்கம் அங்கே..
அவர்களுக்காக..
பிரியத்துடன்..ஒரு
பிரியா விடை..

No comments: