ஒரு சின்ன மூடியா..நம் mood ஐ ஆஃப் செய்வது?
வேலையெல்லாம் முடிச்சு கதவை சாத்திட்டு வந்த நேரம் ..காலிங் பெல் கூப்பிட்டது.
எதிர்த்த வீட்டு மாமி தான்.
" வாங்க உள்ளே ' நான் சொல்ல..
ஒண்ணுமில்லை நேத்திக்கு ஒரு " veg cutter ' வாஙிண்டு வந்தேன் .எங்க சரஸு சொன்னாள் உன் கிட்டயும் இதே மாடல் தான் இருக்காமே .எப்படி use பண்றதுனு கொஞ்சம்.சொல்லேன் என்றார்.
ஆமாம் same தான். சொல்லிட்டு டெமொ செய்து காண்பிக்க ஆரம்பித்தேன்.
"இது கதக்கு..இது பரத நாட்டியம்'னு சலங்கை ஒலி ஸ்டைலில் சொல்லிக் கொடுத்து முடிச்சாச்சு.
காய் கட் பண்ற blade , தயிர் கடையறது இருக்கு..ஒரு மூடி இருக்குமே எங்கனு கேட்டேன்.
மூடியா..அப்படி ஒண்ணு இருக்கறதையே மூடி மறைச்சுட்டானே அந்த கடைக்காரன்னு மாமி ஒரே டென்சன்.
எதுக்கும் அதோட டப்பாவில் இருக்கும் செக் பண்ணுங்கோனு சொல்லி மாமி check out ஆனப்பறம் வந்து தூங்கிட்டேன்.
விடிகாலையில் பால் கவரை எடுக்க கதவை திறந்த்போது கோலம் போட்டுக் கொண்டிருந்த மாமி..' அதையேன் கேக்கற போ..மூடி இல்லவே இல்லை இந்த மாடலுக்கு' என்று சொல்லவும் எனக்கு முதலில் தலையும் புரியல வாலும் புரியல.
பையெல்லாம் கூட தேடிப் பார்த்துட்டேன் ..என்று சொல்லிட்டு 'தூங்காத கண்ணென்று ஒன்று' நு ராத்திரி முழுதும் மூடியை தேடிய களைப்போடு மாமி உள்ளே போக..
அட ராமா..ஒருத்தரோட நிம்மதியான ராத்தூக்கம் கெடுத்த பாவி ஆகிட்டேனோனு மனசுக்கு கொஞ்சம் ஆகிவிட்டது..
நான் நல்லவ தான்ப்பா ..moment
No comments:
Post a Comment