Thursday, May 12, 2016

தேர்தல்

தேர்தல்..
மன்னாராட்சி மறை'தல்'
மக்களாட்சி உதித்'தல்'...
உரிமை பெறு'தல்'...
உள்ளங்கள் நிறை'தல்'..

ஆனால் இப்போ..!!!

துருவங்கள் இணை'தல்'.
துட்டுக்கு வளை'தல்'..

சட்டங்கள் மீறு'தல்'.
திட்டங்கள் வீசு'தல்'..

சாதிபேரில் சாய்த்'தல்'..
சாமானியன் வீழ்'தல்'..

கட்டுக்கள் கடத்'தல்'..
பெட்டகங்கள் நிறைத்'தல்'..

உண்மை மறைத்'தல்'..
பொய்கள் இறைத்'தல்'..

வீரமாய் பேசு'தல்'..
வரம்பின்றி ஏசு'தல்'..

சீட்டுக்கு மோ'தல்'..
ஓட்டுக்கு அலை'தல்'..

சிங்கம்போல்  சீறு'தல்'
நரிவேடம் போடு'தல்'..

மக்களைப் போற்று'தல்'
மன்னராய் வணங்கு'தல்'..

மனங்களை மாற்று'தல்'..
மாயமாய் மறை'தல்'..

முதுகெலும்பின்றி வளை'தல்'..
சுயமரியாதை தொலைத்'தல்'..

கூழைக் கும்பிடு 'தல்'..
இதுதானா தேர்'தல்'?...

வாக்கு மழை பொழி'தல்'..
வென்றபின் ஓடு'தல்'..

நாடகம் நடித்'தல்'..
நன்றி மறத்'தல்'..

கஷ்டங்கள் சூழு'தல்'..
கனவுகள் கலை'தல்'..

எதிர்ப்பார்ப்புகள் சிதை'தல்'..
ஏமாற்றம் மிகு'தல்'..

தேர்தல் ...
கெடுதலா..????
நம்பிக்கை குறைதலால்..!!!

மக்கள் தேடும் மாறு'தல்'..
தருமா இந்த தேர்தல்..??

No comments: