Saturday, May 21, 2016

Result day

சில நினைவுகள்..
கணிணியில்லா..
கடந்த காலம்..

செல்லில்லா.
செய்தித்தாள் காலம்..

மாலை இதழ்கள்..
முடிவேந்தி வரும்..

பரீட்சை எண்கள்..
பக்கம் பூராவும்..

மேலிருந்து கீழா..
வடமிருந்து இடமா..
தேடல்..தேடல்..
ஒரு வழியா கண்டுபிடுச்சு..
'ஒ'..அம்மா நான் பாஸ்ஸாகிட்டேன்..

பச்சை கலர்..
மிட்டாய் வழங்கி...
பெரிசா சாதிச்ச
பெருமிதம்..

பள்ளிக்கு போனாதான்..
வண்டவாளந் தெரியும்..
வாங்கின மதிப்பெண்கள்
வெளியில சொல்ல முடியுமானு..

இறுதித் தேர்வு முடிவுகள்..
அன்றும் ..
tension..
இன்றும்..
tension..

இதில என்கதை..
வேற கதை..
அம்மா..
அரசு அதிகாரி..

நான் நீ என போட்டி..
என் மார்க் முதலில் பார்க்க.
அம்மா கொஞ்சம் senti..
செல்வராஜ் கிட்ட கொடுத்தா..
centum கண்டிப்பா வரும்..
சொல்லவா முடியும்..
எப்படிப் பார்த்தாலும்
எண்பதைத் தாண்டாதுனு..

இப்படியாக..
ஊருக்கு முன்னாடி..
மார்க்கும் தெரிந்து..
மன நிம்மதியும் போயி..
இதுக்குத்தான் அப்பவே சொன்னேன்..
இன்னும் கொஞ்சம்..
நன்னா படின்னு...

ஒரு பக்கம்...
அப்பாடா.
மறுபக்கம்..
அப்பப்பா..

போதுண்டா சாமி..
இந்த result ..
படுத்தும் பாடு..??!!!


No comments: