Sunday, May 29, 2016

mall..mall..maalu..

மால்கள்.
மயக்க வைக்கும்..
மாயாஜால உலகம்..
மாசச் சம்பளம் பூராவும்..
மாயமாகும் அவலம்..


வாராந்திர விடுமுறை
வெட்டியா..வீணாக..
விரயமாகும் பணம்..
வீட்டில் நிரம்பும் குப்பை...

வளைஞ்சு..வளைஞ்சு..
வந்த வழி மறக்க...
வாய் பிளந்தே வேடிக்கை..
விழுவோம்..பாதாள உலகில்.

பகவானே..
buy one get one..
படு குழியில் விழாம..
பத்திரமாய் வெளியேரணுமே..

(பால்)பாட்டில் ஒரு கையும்..
பாப்பா மறுகையும்..
'பர்ஸே'ந்தி பின்தொடரும்
பரிதாப 'பதி'கள்..

ஒவ்வாத உடுப்புகளில்.
ஒய்யார நடை போட்டு..
ஒரு முறை முறைத்து
ஓகே சொல்ல வைக்கும்..
ஒன்றில் கலந்த பத்தினிகள்..

சாப்பாடு வகைகளோ..
சகட்டு மேனிக்கு..
வாயில் நுழையா பெயர்கள்..
விறுவிறு வியாபாரம்..
வீங்கும் வயிறுகள்..

அம்மாக்கள் பாடோ..
அது மிகத் திண்டாட்டம்..
coat stand ஆ மாறணும்..
கோபமே கூடாதங்கே..

காமிரா ஒளிச்சிருக்காணு..
கவனமாப் பார்க்கணும்..
காவலாய் இருக்கணும்..
கால் கடுப்பை பொறுக்கணும்..

ஒரு  மூட்டையிலிருந்து..
ஒண்ணே ஒண்ணு..
ஒரு வழியாப் பிடிக்கும்..
ஒம் சாந்தி மனஞ் சொல்லும் .

அங்கே ..
காலை முதல்..
கால் கடுக்க நின்னு..
கசக்கிப் போட்டு..
குப்பை மேடாக்கி்யதை
கரிசனமா..மடித்து..
கடமை செய்யும்..
காவல் பெண்ணுக்கு...
கைக் கொடுக்கத் தோணும்..

'மணி'யும்..
'money 'யும் ..
மதிப்பிழந்த ஓர் இடம்..
மால்களே..மால்களே..மால்களே..

No comments: