Sunday, May 8, 2016

அம்மா..

the first enemy and a first friend  to any girl ..we feel many times that she is  demanding..sometimes dominating..many times dictating...talking discipline..at the same time taking you to shopping s..loading your wardrobes with colors ..never tired of preparing your favourite dishes...even after you become a mother ..she continues with the same trend..teaches you petty things that no school ever can teach..
who else except a mom..
I know you will now be having a good time with your mom dad and leading a tranquil heavenly life..
give me strength amma as always..
I don't miss u..
you are always with me..


இறந்த காலம்...அது
அம்மா இருந்த காலம்..

கார் சத்தம் கேட்குமுன்..
கதவு திறந்து காத்திருப்பாள்..
கைப்பை வைப்பதற்குள்..
கமகம ..காப்பியோடு நிற்பாள்..

அலமாரி ஒழித்து இருக்கும்..
அழகாய் நான் துணி அடுக்க..
காலில் சக்கரம் கட்டி..
கடிகாரத்தோடு..போட்டி
வருகை ப் பதிவில்லா..
வந்து போவோர்கள்
விருந்துககள்..விருந்தோம்பல்கள்..

அது இறந்த காலம்..
அம்மா இருந்த காலம்..

இப்போதும் செல்கிறேன்..
என் அம்மாவே இல்லா..
அம்மா வீட்டுக்கு....

வரவேற்கும்....
வெறிச்சென்ற வாசல்..
வாசமில்லா சமையலறை.
வாடிய பூந்தோட்டம்..
மூலையிலே ..
எஜமானியைத் தேடும்..
எந்திரங்கள் எல்லாம்..
பொங்கிப் போட்ட நாட்கள்
பழஙகதையாய்ப் போச்சு..
பொட்டலத்தில் கட்டிச் சென்ற
பருப்பும் அரிசியும் போட்டு..
பல நாளாய்க் காத்திருக்கும்
பழகிய காக்கைக்கு..படையல்..
அடுக்கிய புடவைகள்..
அம்மாவின் வாசனை..
உன் தகனத்திற்கு பின்..
தகவல் அறிந்தேன்..
தான தருமம்..நீ
தாராளமாய்ச் செய்ததை..
சண்டைகள்..
சமாதானங்கள்..
எங்கே போவாய்..அம்மா..
என்னை விட்டு .
எப்போதும் என்னுள்ளே..
எப்பவும் போல..
என்னை ஆண்டு கொண்டு..

அம்மா..இருந்்த காலம்..
இருக்கும் நினைவில்..என்
உயிருள்ள காலம்..

No comments: