Tuesday, May 31, 2016

வெய்யில்..

சீலைத் தலைப்பில் ஒளிந்து..
சிறு விழி ஜாலம் காட்டும்..
சின்னக் குழந்தை போல...
வெள்ளித்திரை நீக்கி..
வெளி வர யோசனையோ..

'என்ன வெய்யில்'..
'என்ன வெய்யில'்..
வெய்யாமல் நானிருக்க..
வியர்வை கொட்டா..
வெளிச்ச மட்டுமேந்தி..
வெளியே வா..
வெஞ்சுடரே..

No comments: