Wednesday, April 5, 2017

ஒரு வார்த்தை

ஒரே ஒரு வார்த்தை  கேட்டிருக்கலாமே..
'இந்த வாண்டைத் தூக்கிண்டு ஏற முடியலையே..ஒரு தடவை என்னைக் கேட்டிருக்கலாமே அம்மா..என்ன வேண்டுதல் இதெல்லாம்..
தாயும் சொன்னாள்
தலைப் பிரசவம்...
தாயும் சேயும் நலமா இருக்க
திருமலையானை தரிசனம் பண்ண
 தூக்கிண்டுனு வரேன் நடைபாதி வழியாக..
இந்த மாதிரி எத்தனை முறை சொல்றோம்..'ஒரே ஒரு வார்த்தை கேட்டிருக்கலாமே/சொல்லி இருக்கலாமே..
அப்பா..ஏம்ப்பா இந்த மாடல் ஃபோன் ஆர்டர் பண்ணின..ஒரு தடவை என்னை கேட்க மாட்டியா...
நண்பர் சொல்வார்..ஏன் சார் ஒரு வார்த்தை கேட்டிருக்கலாமே ..எனக்கு தெரிஞ்ச ஆள் கிட்ட சொல்லி வேலையை முடிச்சிருக்கலாமே..
ஆத்துக்காரி புலம்பலுக்கு பயந்து டூர் போன இடத்தில ஒரு புடவை வாங்கிண்டு வந்தா..ஏண்ணா..ஒரு வார்த்தை என்கிட்ட கேட்டிருக்கலாமே...என்கிட்ட இல்லாத கலரைச் சொல்லி இருப்பேனே..
கல்யாணத் தரகர் சொல்வார்..எதுக்கும் ஒரு வார்த்தை பைய்யன்/பொண்ணு கிட்ட கேட்டுடுங்கோ..வாழப் போறவா அவா..என்பார்.
கண்ணா.. இன்னிக்கு சாயந்திரம் ராஜி aunty ஆத்துக்கு போகணும்..சீக்கிரமா படிச்சு முடிச்சுடறயா என்று புத்திர /புத்திரி சிகாமணிகளை கேட்க..குபீர்னு பாய்ஞ்சு..என் கிட்ட ஒரு வார்த்தை கேட்க மாட்டியா..நான் மாட்டேன் என்று பிடைவாதம் பிடிக்க..
இப்படி எல்லாரும் பிடிச்சிண்ட 'என்னை ஒரு வார்த்தை கேட்டிருக்கலாமே' dialogue..
ஏன் தோணவே இல்லை..இந்த ராமபிரானுக்கும், அந்த சீதா பிராட்டிக்கும்..
Sriram Jayaram Jaya Jaya ram

No comments: