Thursday, April 13, 2017

கோயில் பிரசாதம்

கொழுப்பைக் குறைக்க
காலை நடை பயிற்சி..
காலெல்லாம் கெஞ்ச
காதில் விழுந்தது
கோவில் மணியோசை..
கண்ணைப் பறிக்கும்
அலங்காரத்தில்..
கடவுளும் காட்சி தர
கும்பிட்டு நான் நின்றேன்
குறையெல்லாம் கொட்டித் தீர்த்தேன்..
பிரகாரம் சுற்றி வந்து
பிரசாத வரிசையில் நின்றேன்
பாத்திரத்தில் நிரம்பிய தெல்லாம்
பசியும் கிளறி விட்டதே
மிதக்கும் முந்திரியில்
மிதமான தித்திப்பில்
மயக்கும் கேசரியும்
மணமணக்கும் புளியோதரை யும்
(படத்தில் கேசரியில் முந்திரியைக் காணொமேனு தேடாதீங்க..மூளை வேலை செய்ய வச்ச முந்திரி..)
முழுங்கிடலாமா இங்கேயே என்று
முழித்துக் கொண்டிருந்த நேரம்..
மனசாட்சி சொன்னது..
மரியாதையா..நடையைக் கட்டு..
மண்ணாகிப் போகுமே..
மாங்கு மாங்கென்று நடந்ததெல்லாமென்றே.

No comments: