Thursday, April 13, 2017

புது யுகம்

சுட்டெரிக்கும் வெயிலிலே
சுள்ளி பொறுக்கி
பள்ளி செல்லும் தன் மக்களுக்கு
சல்லிக் காசு சேர்த்து வைக்க
சலிக்காமல் இவள் உழைப்பாளே.
தலையில் பாரம் இருந்தாலும
தவழும் புன்னகையோ டிவள
தன்னம்பிக்கை துணை வரவே
தூரம் பலவும் நடப்பாளே.
தூக்கில் சோறும் குடிக்க நீரும்
இடுக்கிய குடையும் விறுவிறு நடையும்
இருக்கு இன்னும் தூரமென்றாலும்
இனிதாய் எளிதாய் கடந்தே போவோம்..
புண்ணேறிய கால்கள்
புன்னகை மாறா முகங்கள்..
புறப்பட்டதோ இங்கே.
புது யுகம் படைக்க
சிரிப்பு மாறா முகத்தோடு

சுமைகள்யாவும்  சுகமாய்த் தோன்ற
சுவடுகள் பதிக்க துவளுவதில்லை.
சுவர்கள் எல்லாம் சுளுவாய்த் தாண்டி
சரித்திரம் நாமும் படைத்திடுவோமே

No comments: