Friday, April 28, 2017

மேகமே.. மேகமே..
எட்டிப் பார்க்காதே இன்றென
எத்தனை பாடு பட்டும்
சுட்டெரிக்க வந்தே தீருவேனென
சூளுரைக்கும் சூரியனே..
நீயும்.. சோர்ந்து போவாய்
களைப்பும் வருமுனக்கு
காத்திருப்பேன்..
கம்பளிப் போர்வையாய் ..நீ
கண்ணுறங்கும் போதினிலே

வெற்றி இன்று உனது
வெறுத்து ஓட மாட்டேன்..
விடாது முயல்வேன்
அடை மழையாய்ப் பெய்து
அவணியைக் காக்கும்வரை

No comments: